உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய பண மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கைத் தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்கள் ஏமாற்றப்படும் ஒரு பாரிய நிதி மோசடி குறித்து தபால் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தபால் மூலம் வந்துள்ள ஒரு பொதியைப்பெற்றுக்கொள்வதற்கு சிறிய கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும் எனக் கூறி, பொதுமக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அந்தச் செய்தியில் உள்ள இணைப்பை கிளிக் செய்யும்போது, அது தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலிப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு உங்களது வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கோரப்படும். அவ்வாறு விபரங்களை வழங்கிய சில நிமிடங்களிலேயே, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இவ்வாறான முறைப்பாடுகள் தபால் திணைக்களத்திற்கு அதிகளவில் கிடைத்து வருகின்றன. இது தொடர்பில் தபால் திணைக்களம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அந்நிய நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். வங்கி அட்டை விபரங்கள் அல்லது கைபேசிக்கு வரும் OTP குறியீடுகளை எக்காரணம் கொண்டும் எவருக்கும் வழங்க வேண்டாம். தபால் திணைக்களம் ஒருபோதும் குறுஞ்செய்திகள் ஊடாக வங்கி விபரங்களைக் கோருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். என அறிவுறுத்தப்படுகின்மையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0