அனர்த்தத்தால் பாதித்த மீனவர்களுக்கு நிவாரணம்: 45 பேருக்கு காசோலை வழங்கல்.!
கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி ஏற்பட்ட தித்வா அனர்த்தத்தால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில், காசல்றீ மற்றும் மௌசாகலை பகுதிகளைச் சேர்ந்த 45 மீனவர்களுக்கு தலா 75,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிவாரண உதவிகள் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டதுடன், இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி கலந்து கொண்டு பயனாளர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
