உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எதிர்வரும் நாட்களிலும் தணியாத வெப்பம்.! பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால் வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேல், சபரகமுவா, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் மனித உடல் உணரும் வெப்பம் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த எச்சரிக்கை தாமதமாக வெளியிடப்பட்டதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர். முன்கூட்டியே அறிவித்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடிந்திருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதனிடையே, வெப்பத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பச் சோர்வைத் தவிர்க்க அதிகளவில்தண்ணீர் அருந்தவும், நேரடி வெயிலில் செல்வதை தவிர்க்கவும் வளிமண்டலவியல் திணைக்களமும் சுகாதார நிபுணர்களும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களிலும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0