யாழில் இளைஞர் மீது கொடூர கத்தி வெட்டு தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை இலக்காகக் கொண்டு இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடைபெறும் போது குறுக்கே வந்த தாயாரும் தவறுதலாக காயமடைந்ததாக கூறப்படுகிறது.படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.