உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நிறுத்துமாறு ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

புதன்கிழமைகளில் நடைபெறும் அனைத்து பயிற்சி வகுப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இது கட்டாய உத்தரவு அல்ல என்றும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடுக்கப்பட்ட வேண்டுகோள் மட்டுமே எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.


புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக திறனை ஒதுக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமைகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும், சுகாதாரம், வங்கி, மின்சாரம், குடிநீர், துறைமுகம், சுங்கம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0