சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்றவர் திடீரென உயிரிழப்பு.!
சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்ற ஒருவர் இன்று காலை 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தெகிவளை பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த சம்பத் பெர்னாந்து எனும் 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை சிவனடிபாத மலைக்கு செல்லும் வழியில் உள்ள கங்குல தென்ன பகுதியில் வைத்து குறித்த நபர் திடீரென சுகயீனம் அடைந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன காவல்துறையினர் ஊடக நல்லதண்ணி நகருக்கு தூக்கி வரப்பட்டு அங்கு இருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே அவர் உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அவரது சடலம் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.