உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இணையவழி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுக் கும்பல் சிக்கியது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் குழு ஒன்று நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, 9 சந்தேக நபர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக,
கொடகந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் 84 மொபைல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பூசா இராணுவப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் அதிகாரிகள் குழு இந்தச் சோதனையை நடத்தியது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொத்தல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொத்தல பொலிஸார் சந்தேக நபர்களை காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

0 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0