போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.!
அதிகஷ்ட பிரதேசத்தில் கடமையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்குமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று காலை (24) 9.30 மணியளவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாணத்தில் உள்ள அதி கஷ்டப் பிரதேசங்களான, மன்னார், கடல் கடந்த தீவுகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள், 8 வருடங்களை கடந்து கடமையாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கான இடமாற்றத்தை உரிய முறையில் வழங்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

