கியூ.ஆர். முறைமை சீரமைக்கப்பட்டதால், எதிர்கால சட்டவிரோத செயல்களுக்கு இடமில்லை – எரிசக்தி அமைச்சர்.!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி. சூரியபண்டார இன்று (மார்ச் 19) நாடாளுமன்றத்தில் கூறியதாவது, கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயன்ற வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டது.
இச்சம்பவம் திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிகழ்ந்தது என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வாறான முறைகேடுகள் நிகழ வாய்ப்பு இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், கியூ.ஆர். குறியீடு தொடர்பான அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டிருப்பதால், இன்றைய தினத்திலிருந்து இதுபோன்ற மோசடிகள் இடம்பெறாது என அவர் உறுதியளித்தார்.
மேலும், கியூ.ஆர். முறைமை முழுமையாகச் செயல்படும் நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரத்நாயக்க அறிவித்தார்.