நெல் உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் நேற்றையதினம்(15) நெல் உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.