இரு சக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து.!
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து கேகாலை – அவிசாவளை பிரதான வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கேகாலை திசையிலிருந்து பயணித்த இரு சக்கர வாகனமும், அவிசாவளை திசையிலிருந்து வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த இருவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளார்.வெளிநாடு செல்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.