விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற கண்காட்சி.!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய தரம் -03 மாணவர்களின் “பிள்ளைகளை இனங்காணும் செயற்பாட்டின்” மகிழ்ச்சிகரமான ஆரம்பத்திற்கான கண்காட்சி நிகழ்வு நேற்றைய தினம் பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் தரம் 03 வகுப்பாசிரியரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாணவர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலை மேன்பாட்டு அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி ஆனந்தி பாவாநந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சமுகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவர் ஒருவரினால் தும்பினால் செய்யப்பட்ட அழகிய வீடு ஒன்று பாடசாலையில் அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
