உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அனுமதியின்றி நாட்டப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகள் அகற்றப்படும் – செங்கலடி பிரதேச சபை தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று – செங்கலடி ஸ்ரீசபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் அனுமதி இன்றித் தொல்பொருள் திணைக்களம் அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதியின்றி நாட்டப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்ற நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இயங்கும் செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.1987 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தின் படி, உள்ளூர் அதிகார சபைகளின் அனுமதி இன்றி இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இருப்பினும், விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சொந்த இடங்களில் தொல்பொருள் இடங்கள் எனக் குறிப்பிடப்பட்ட பலகைகள் நாட்டப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, இது மொழி உரிமை மீறல் என பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வடக்கு–கிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் முதன்மையாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனையடுத்து, முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களை வழங்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடுவிற்குள் விளக்கம் வழங்கத் தவறினால், பிரதேச சபையின் அதிகாரத்தை பயன்படுத்தி அடையாளப் பலகைகள் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதுடன், தேவையாயின் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க சபை தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

52 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0