உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிங்கள–பௌத்த வாக்குகளால் வென்ற ஜனாதிபதி அவர்களது நலன்களை பாதிக்கக் கூடாது – சரத் வீரசேகர.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சிங்கள–பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி பதவிக்கு வந்துவிட்டு, வடக்கிற்குச் சென்று அவர்களைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்படக் கூடாது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் அநுரகுமார திஸாநாயக்க தோல்வியடைந்ததாகவும், நாடு முழுவதும் அவருக்கு கிடைத்த வாக்குகள் 42 சதவீதம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

அந்த வாக்குகளில் பெரும்பாலானவை சிங்கள–பௌத்த மக்களிடமிருந்து கிடைத்தவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதனால், சிங்கள–பௌத்த வாக்குகளின் அடிப்படையில் பதவிக்கு வந்த ஜனாதிபதி, வடக்கிற்குச் சென்று சிங்கள–பௌத்த மக்களின் நலன்களுக்கு எதிரான வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சரத் வீரசேகர வலியுறுத்தினார்.


மேலும், திஸ்ஸ விகாரை என்பது புராதன விகாரை என ஏற்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய காணி உரிமையும் சட்டரீதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதி மேற்கொள்ளும் அறிவிப்புகள், சிறீதரன், கஜேந்திரகுமார் போன்ற தரப்புகளுக்கு மேலும் உந்து சக்தியாக அமையக்கூடும் எனவும் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

52 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0