உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

காதலியை நம்பிச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம் ; சினிமா பாணியில் சித்திரவதை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த சோனு எனும் 18 வயது இளைஞர், ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண் சோனுவுடன் தங்கியிருந்த நிலையில், குடும்பத்தினர் தலையிட்டு அவரை மீண்டும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தனது காதலி அழைக்கிறார் என்று நம்பி அவரைச் சந்திக்க ராஜஸ்தான் சென்றுள்ளார் சோனு. ஆனால், அது அவரைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட நாடகம் என்பது அவருக்குத் தெரியவில்லை.

அங்கு சென்ற சோனுவை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு கடத்தி, மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.சிறைபிடிக்கப்பட்ட சோனுவை அந்த குழு சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், மிகக் கொடூரமாக சிறுநீரை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர். இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் அவர்கள் காணொளியாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டியுள்ளனர்.

அந்த அதிர்ச்சிகரமான காணொளியைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தனர்.இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், கடத்தப்பட்ட இளைஞரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டதுடன், தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கைது செய்ய தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மனிதாபிமானமற்ற இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0