உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சின்னக்குயில் சித்ராவின் “ஒரு சகாப்தம்” இசை நிகழ்ச்சி – கொழும்பில் பிரம்மாண்ட ஊடக சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி, ‘சின்னக்குயில்’ கே.எஸ். சித்ரா பங்கேற்கும் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி குறித்த விபரங்களை வெளியிடுவதற்கும், உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பு நேற்று (17) கொழும்பு ஒன் கோல் ஃபேஸ் வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள லேக் ஏட்ரியம் பகுதியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.Falcon Global Solution, JFX Productions மற்றும் NE Productions அகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த இசைப் பெருவிழாவானது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

நேற்றைய ஊடக சந்திப்பில் பாடகி கே.எஸ். சித்ரா அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு, இலங்கையில் உள்ள தனது இசை இரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததோடு ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது இனிய குரலால் தான் பாடிய பாடல்களில் ஒரு சில வரிகளையும் பாடினார்.பல தசாப்தங்களாகத் தனது தேன் குரலால் உலகவாழ் இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள சித்ராவின் இந்த நேரடி இசை நிகழ்ச்சி, இலங்கையில் உள்ள அவரது ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இசை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0