உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சத்தியலிங்கம் எம்.பி தலைமையில் இடம்பெற்ற தமிழரசின் பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கலாச்சார பொங்கல் விழா இன்று (16.01.2026) காலை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்றது.

கட்சியின் மாவட்டக்கிளை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா இடம்பெற்றதுடன் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளும், அதிதிகள் வாழ்த்துரையும் இடம்பெற்றது. மேலும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப் பொருட்களும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பணப்பரிசில்களும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0