பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!
கண்டியில் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொன்தென்னாவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (14) இரவு பொல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவருக்கும் 34 வயதுடைய சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.