உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் அதிகரிப்பு – 11 பேர் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுவரை 11 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சபையின் மாதாந்த அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.    அவர் மேலும் பேசுகையில்,

    மலையகத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், இதற்கு அசுத்தமான குடிநீரைப் பருகுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பொது சுகாதாரப் பரிசோதகர்களைக் கொண்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் கூட 28  மற்றும்  35 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக இந்த வட்டாரத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் மருத்துவ வைத்திய அதிகாரி (MOH) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) ஆகியவற்றுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

    மேலும் கொட்டகலை அமைதிபுரத்தில் உள்ள பாதை ஒன்று  யாருக்கு சொந்தம் என்பதில் இன முறுகல் ஏற்படக் கூடிய அச்சம் காணப்படுகின்றது. அங்குள்ள பிரதேச வாசிக்கா அல்லது புகையிரத திணைக்களத்துக்கா உரித்தானது  என்பதை அளவீட்டின் மூலம் கண்டறிந்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.  

    கொட்டகலை நகரில் “தங்கக் கடன் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் இலட்சக் கணக்கான ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாகவும்,  நகைகளை மீட்பதற்காக கொடுக்கப்பட்ட இலட்சக் கணக்கான பணத்தோடு குறித்த நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் இதுவரை 1720 பேரின் நகைகள் அடைவு பிடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களுக்கு பிரதேச சபை அனுமதி வழங்கும் போது, சரியான முறையில் பரிசீலனை மேற்கொண்டு வழங்க வேண்டும்.

      கொட்டகலை நகரில் உள்ள மதுபானசாலைகள் காலை நேரத்திலேயே திறக்கப்பட்டு விடுகின்றன. சில நேரங்களில் அடிபிடி சண்டைகள் உட்பட பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆகவே, கலால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு  மாலை நேரங்களில் திறப்பதற்கு பிரதேச சபைத் தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0