உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

பருத்தித்துறை நகரசபைக்கு சொந்தமான நவீன சந்தை கட்டடத் தொகுதியில் நடைபாதையினை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டு வந்த வியாபார நடவடிக்கைகளை அகற்றுவதற்கு நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த நடைமுறையினை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாக அவர்களுக்கு ஒப்பந்தத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு மேலதிகமான இடத்தை ஆக்கிரமித்து பொருட்கைள பரப்பி வியாபார நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதனால் நடைபாதையினை முற்றாகவே பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.குறிப்பாக வெயில், மழை நேரங்களில் பிரதான வீதியூடாகவே பயணித்து கடைகளுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் கடந்த 01 திகதி முதல் வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்ளாக பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்துவதற்கு இடையூறு இல்லாத வகையில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (08) இரவு குறித்த நடைமுறைகள்பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நேரில் பார்வையிட்டிருந்தார்.இதன்போது மேற்குறித்த அறிவுறுத்தலை மீறி செயற்பட்டு வந்த சில வர்த்தக நிலையங்கள் செயற்பட்டமை கண்டறியப்பட்டது.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக செயற்படாவிடில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நகரசபை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகரபிதாவினால் நேரடியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று (09) வெள்ளிக்கிழமை காலை நகரசபை உத்தியோகத்தர்கள் நேரில் பார்வையிட்டு, திங்கட்கிழமை முதல் மேற்குறித்த நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த வர்த்தக நிலையங்களுக்கு இறுதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0