உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் “லஞ்ச் சீற்”பயன்பாடு தடை!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் “லஞ்ச் சீற்” பயன்படுத்த முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அதனை மீறி செயற்படும் உணவகங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வழிகாட்டுதலில் நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களினது உரிமையாளர்களுக்கான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சீற் பாவனையை முற்றாகத்தடை செய்யும் முகமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் இன்றைய தினம் (09) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உபதவிசாளர் தலமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சகல உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டது.

குறித்த நடைமுறை உடனடியாக அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் வரும் 15 ஆம் திகதி வரை மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனவரி 16 முதல் முற்றுமுழதாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்சீற் பாவனை தடை தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் இதன் போது உணவக உரிமையாளர்களிற்கு விநியோகிக்கப்பட்டது.

இதன்போது 2026 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமங்கள் மார்ச் 31 இற்கு முன்னர் அனைவரும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் கலந்து கொண்டு உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

வடக்கு மாகாணத்தில் “லஞ்ச் சீற்” பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடந்த 01 முதல் முதல் பருத்தித்துறை நகரசபை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0