உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி:ஐஎம்எப் எச்சரிக்கையை அம்பலப்படுத்திய திலித்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது நாடு பாரிய சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக IMFயை மேற்கோள்காட்டி இன்று நாடாளுமன்றத்தில் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்துரையாற்றிய அவர்,ரணில் விக்ரசிங்க இருக்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 285 ரூபாவில் இருந்தது.ஆனால் இன்று 313 ரூபா வரை அதிகரித்துள்ளது.இதில் ஏற்பட்ட பொறுப்பு டொலர் பில்லியன்1140 ரூபா ஆகும்.அதாவது அதிகரித்துள்ள தொகையாகும்.ரணில் விக்ரசிங்க செல்லும் போது வெளிநாட்டு கையிருப்பு 800 டொலர் பில்லியன் ரூபாவாகும்.

இன்று வெளிநாட்டு கையிருப்பு 1.2 டிரிலியன் வரை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையால் நாம் இருந்த இடத்தில் இருந்தும் கீழே வீழ்ந்துள்ளோம்.அத்தோடு அனர்த்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்காக 500 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடவுள்ளது.இதன் காரணமாக நாம் இருக்கும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பொருளாதாரத்தின் உண்மையான கள நிரவத்தை மக்களுக்கு மறைப்பதை விடுத்து தெளிவுபடுத்த வேண்டும்.இன்னும் அரசாங்கம் புள்ளிவிபரங்களை காட்டி ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0