பத்து வாள்களுடன் சிக்கிய சந்தேகநபர்.!
10 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மட்டக்குளிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என கூறப்படுகிறது.
குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றவாளியான வெல்லே தனுஷ்கவின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்குளிய அலிவத்த கோவில் அருகே 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரை மட்டக்குளிய பொலிஸ் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
அதனைதொடர்ந்து, சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து வாள்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.