பக்தர்கள் போற்றும் ஆட்சி இது: முதல்வர் ஸ்டாலின்!
பக்தர்கள் போற்றும் ஆட்சி இது” என மக்கள் தீர்ப்பில் தெரியவரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.
இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் – எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்!தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 1,595 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.
நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால், உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று குறிப்பிட்டுள்ளார்.