உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஹரிணிக்கு எதிரான பிரேரணை மண்கவ்வும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையற்றது என்று அமைச்சர் கே.டி. லால் காந்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எதிரணிகள் அரசியல் நோக்கத்துடன் இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருப்பதால் எதிரணிகளின் முயற்சி வெற்றி பெறாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சராக ஹரிணி அமரசூரிய மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டின் கல்வி முறைமைக்கு சாதகமாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, எதிரணிகளின் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் நாடகம் என்றும் அமைச்சர் லால் காந்த கடுமையாக விமர்சித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0