உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, ‘பணிப் புறக்கணிப்பு’ எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வரும் வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக், இம்தியாஸ், பௌசான், மனாப் ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் – மூன்று நாட்களாக, வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய மழைக்காலத்தில் கணிசமான மக்கள் நோயுற்ற நிலையில் – அரச வைத்தியசாலைகளை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை வழங்க வைத்தியர்கள் மறுக்கின்றனர்.இதிலுள்ள மனசாட்சி அற்ற விடயம் என்னவென்றால், பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அனைத்து வைத்தியர்களும், அந்த நாட்களில் கடமையில் இருந்ததாகக் குறிப்பிட்டு, அதற்குரிய சம்பளத்தைப் பெறுகின்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தால், அதனை சுகாதாரத் திணைக்களம் அல்லது சுகாதார அமைச்சு அல்லது வேறு தொடர்பான நிறுவனங்களில் முறையிட்டு, தீர்வைப் பெறுவதுதான் பொருத்தமான வழியாகும்.அதை விட்டுவிட்டு, பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு சிகிச்சை வழங்க மறுப்பது கொடுஞ் செயலாகும்.

இதன் மூலம் இவர்கள் – மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மறுபுறமாக, இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் வைத்தியர்கள், பின்னேர வேளைகளில் அவர்களின் தனியார் வைத்திய நிலையங்களில் மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வைத்தியம் செய்கின்றனர்.

எனவே, இந்த கருணையற்ற வைத்தியர்கள் அனைவரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகவே, அவர்களுக்கு எதிராக இன்று பொலிஸ் நிலையத்தில் நாம் முறைப்பாடு செய்துள்ளோம் என முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0