உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வி.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
17 பார்வைகள்

நுவரெலியா, கிரகரி வாவியில் சிறிய ரக வானூர்தி ஒன்று நேற்று பிற்பகல் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது.தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த சிறிய ரக வானூர்தி நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் விபத்துக்குள்ளானது.

குறித்த விமானத்தை மீட்க இன்று காலை முதல் மாலை வரையில் அதிகாரிகளும் ஊழியர்களும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.குறித்த விமானத்தை மீட்பது கடினம் என்பதால், விமானத்தை மீட்க தொழில்முறை விமான இயக்குநர் (மாஸ்டர் டைவர்ஸ்) சேவைகளைப் பெறுவோம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை மீட்க போராடினர்.

நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் ஈரப்பதம் கூடிய மோசமான வானிலை காணப்பட்ட போதிலும் சிறிய ரக வானூர்தியை மீட்க பல்வேறு சந்தர்ப்பங்களில் முயன்றனர் இருந்தும் மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன விபத்தில் விமானமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

கிரகரி வாவியில் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகின்றன இதனால் அந்த பகுதியில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது விபத்திற்குள்ளானமை தொடர்பான விசாரணைக்கு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது .

இந்த விபத்தில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0