மஜீத் நகரில் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு!
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகரில் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் இன்று (08)வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உபகரணங்களானது முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு மஜீத் நகர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஹாத் அவர்களின் பங்கேற்புடன் விவசாய உள்ளீடுகளான நீர்ப்பாசன தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
விவசாயத் துறையை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை விருத்தி செய்யவும் ஊக்கமளிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் கூடுதலான விவசாய உற்பத்திகளை எதிர்காலத்தில் பெற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதில் முஸ்லிம் எய்ட் நிறுவன வெளிக்கள திட்ட இணைப்பாளர் எஸ்.எம்.றிபாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.