உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இருவேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாவனெல்லை பிரதேசத்தில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில், கொந்தெனிய சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலையில் இருந்து மாவனெல்லை நோக்கிப் பயணித்த வான் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பெருந்துதான் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் வான் சாரதி, அவரது மனைவி மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் காயமடைந்து, மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், வான் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கடுகன்னாவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு – தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேஸ்லைன் வீதியின் கீழ் தெமட்டகொடை மேம்பாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெமட்டகொடை சந்தியிலிருந்து இங்கம் சந்தி நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் உஹன பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0