உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழு விவகாரம் காலத்தை கடத்தும் நாடகம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசாங்கமானது தெரிவுக்குழு விடயத்தை கொண்டு வருவது ஒரு காலத்தை கடத்துகின்ற நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் டெலோ கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான சபா குதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமானது மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளது.

உண்மையிலேயே இந்த அரசாங்கமானது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தெரிவுக் குழுவை நியமிப்பது என்பது ஒரு அவசியமற்ற விடயம். ஏனெனில் இந்த அரசாங்கமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளது.

உண்மையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் இந்த அரசாங்கம், 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 17ஆம் இலக்க சட்டத்தை மாற்றியமைத்து உடனடியாக பழைய முறை மூலம் தேர்தலை நடாத்த முடியும். அவ்வளவு அதிகாரமும் பலமும் இந்த அரசிடம் உள்ளது.

இந்த தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அநுர அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே இந்த தெரிவுக் குழுவை கொண்டு வருகின்றது. கடந்த காலத்தில் முரண்பாடாக இருந்த அந்த எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை மீண்டும் கொண்டு வந்து காலத்தை இழுத்தடிக்கின்ற நோக்கத்தில் தான் இந்த தெரிவுக்குழு விடயத்தை பிரேரணை மூலமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்றார்கள்.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமார உள்ளடங்களான தரப்பினர், கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான தெளிவுக் குழுவை கொண்டு வரும்போது கடுமையாக விமர்சித்தவர்கள். இந்த தெரிவுக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் எல்லாம் காலத்தை கடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நீர்த்துப்போக செய்கின்ற ஒரு விடயம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையிலேயே இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தெரிவுக் குழுவும் கொண்டுவரப்படுகின்றது.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய இழப்பினை சந்தித்திருக்கின்றார்கள். பொருளாதாரம் பின்னடைந்து இருக்கின்ற நிலையில் மீளவும் நாட்டை கட்டை எழுப்ப இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் நாட்டினை மீளவும் கட்டி எழுப்புவதற்கு ஏதுவான ஒரு கட்டமைப்பு தான் மாகாண சபை.

ஒன்பது மாகாண சபைகளும் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுமாக இருந்தால் அது மத்திய அரசாங்கத்துக்கு ஒரு பலமாக இருக்கும். அரசாங்கம் கொண்டு வருகின்ற நடைமுறைகளை இலகுவாக செய்யக் கூடியதாக இருக்கும்.

எல்லை நிர்ணயமானது மீள் நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தான் தேர்தலை நடாத்துவது என்ற விடயம் தெரிவுக்குழு மூலம் வருவதற்கு தான் இந்த அரசாங்கம் காத்திருக்கின்றது என்ற எதிரணியினரின் குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் உண்மையாகத்தான் இருக்கப் போகின்றது என நான் நினைக்கின்றேன்.

அரசு பலமாக இருக்கின்ற சூழ்நிலையில் பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்தலாம். அல்லது எல்லை நிர்ணயம் என்பதனை ஒரு மாதத்திற்குள் முடிவுறுத்தி தேர்தலை நடத்தலாம். இவ்வாறு இல்லாவிட்டால் தெரிவுக் குழு என்பது காலத்தை கடத்தும் நாடகமாகத்தான் பார்க்கப்படுகின்றது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0