உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகத் தேவையில்லை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனத் தாம் கூறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவி விலகல் குறித்து அழைப்பு விடுப்பது தமது நிலைப்பாடு அல்ல எனவும் அவர் கூறினார்.

அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து பொறுப்புடன் அணுக வேண்டும் எனவும், ஜனநாயக முறையில் தீர்வுகள் தேடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வி அமைச்சுப் பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டுவரும் நடவடிக்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளது.

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0