உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் நெறிப்படுத்தலுடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் மற்றும் கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பல்வேறு வர்த்தக நிலையங்களை நடாத்துகின்ற வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வலியுறுத்தினார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் கல்முனை மாநகரில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வர்த்தகர்கள் தங்களது கருத்துக்களை ஆரோக்கியமாக முன்வைத்ததுடன் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கொள்ளை மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்ததுடன் உடனடித் தீர்வினையும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0