உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

குப்பைக்கான வரி எடுக்காதே!” – மலையகத்தில் ஆர்ப்பாட்டம்.

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
18 பார்வைகள்

நுவரெலியா, பொகவந்தலாவை நகரில் காணப்படும் குப்பைகளைச் சேகரிக்க நோர்வூட் பிரதேச சபை அதிக வரி அறவிடுதாகத் தெரிவித்து பொகவந்தலாவை வர்த்தகர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொகவந்தலாவை வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

இதில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.பொகவந்தலாவை பஸ்  நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்தி வரை சென்று மீண்டும் பேரணியாக பொகவந்தலாவை தண்டாயுதபாணி ஆலயம் முன்பாக வந்தடைந்தது.

பொகவந்தலாவை நகரப் பகுதியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை நோர்வூட் பிரதேச சபை சேகரிப்பதற்கு அதிகூடிய வரியைக் கோருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

“நகரப் பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகளுக்கும் நாம் பெறும் தண்ணீருக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கு நாங்கள் வருடா வருடம் வரிப்பணம் செலுத்தி வருகின்றோம். தற்போது பொகவந்தலாவை நகரில் குவியும் குப்பைகளைச் சேகரிக்க நாளாந்தம் 200 ரூபாவை மேலும் செலுத்துமாறு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கோருகின்றார். ஆனால், நாம் ஒருபோதும் குப்பைக்கான வரிப்பணத்தைச் செலுத்தப்போவதில்லை.” – என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“எமது பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.“எடுக்காதே எடுக்காதே குப்பைக்கான வரி எடுக்காதே”, “கட்டமாட்டோம் கட்டமாட்டோம் குப்பைக்கான வரியைக் கட்டமாட்டோம்”, “நாங்கள் செலுத்தும் வரிக்கு என்ன பயன்”, “மேலும் ஒரு வரிச் சுமையா குப்பைக்கு” போன்ற பாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0