உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தரம் ஆறு மாணவர்களுக்கு தொடரும் பிரச்சனை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
24 பார்வைகள்

2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(05) ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஜனவரி 21 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதுவரை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இல்லாதிருப்பது அதிபர்களையும் ஆசிரியர்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக, பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் வழங்கப்பட வேண்டிய மாணவர் வருகைப் பதிவேடுகள் இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை.

தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் தொகுதிகளில் நூற்றுக்கணக்கான இலக்கணப் பிழைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பாடப்புத்தகங்களை தயாரிப்பதில் தகுதியான நபர்கள் உள்வாங்கப்பட்டார்களா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளுக்கு தீர்வாக, குறிப்பிட்ட பக்கங்களை அகற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு சுமார் 8 இலட்சம் பக்கங்கள் அகற்றப்பட வேண்டியுள்ளன. இந்த வேலையை யார் செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், இந்தப் பாடப்புத்தகங்களின் டிஜிட்டல் பிரதிகள் ஏற்கனவே இணையத்தில் பரவியுள்ள நிலையில், அச்சுப் பிரதிகளில் இருந்து பக்கங்களை கிழிப்பதன் மூலம் பிழைகளை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் கல்விப் பொருட்களில் பிழைகள் கண்டறியப்பட்டால், “பக்கங்களை அகற்றுவதையே” அரசாங்கம் ஒரு தீர்வாக முன்னெடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0