உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
28 பார்வைகள்

லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம் பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வீட்டிலிருந்து பணிக்கு வர அனுமதிக்க, மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதி பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியை வழங்குவதற்கு கையடக்கத் தொலைபேசி உட்பட 72,000 ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா பொலிஸ் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

அதற்கமைவாக நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் விசாரணைக்கு அமைவாக பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட், கடமை நேரத்தில் அலுவலகத்தினுள் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0