உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழ். மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு; மலையகம் நோக்கி புறப்பட்ட குழு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
17 பார்வைகள்

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கினர். அத்துடன் அந்த பகுதிகளில் வாழும் மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை இழந்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்கையில் இன்னும் ஒரு சில மாதங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாவுள்ளது.

அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பரீட்சைக்கு தயாராகுவதற்கான கற்றல் கையேடுகளை வழங்கும் செயற்பாட்டினை வெண்கரம் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கிய ஐந்து பாடங்களை உள்ளடக்கிய கற்றல் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்தகட்டமாக மலையக மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை வழங்குவதற்காக வெண்கரம் அமைப்பு மலையகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பயணமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. பயணத்தின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பரமேஸ்வரா ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த வழிபாடுகள் மற்றும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வெண்கரம் அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

வெண்கரம் அமைப்பினரின் இந்த செயற்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணை அனுசரணை வழங்குகிறது.

வெண்கரம் அமைப்பின் மாணவர் குழுவினர் தன்னார்வ ரீதியாக சேகரித்த நிதியியலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0