உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தையிட்டி ஆர்ப்பாட்ட வழக்கு; வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்காக நீதிமன்றில் முன்னிலையாகும் சுமந்திரன்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் டிஜிட்டல் நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் இப்போது மேலதிகமாக அழைப்பாணை அனுப்பி அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்குமாக இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகின்றார்.

சூடான வாதப் பிரதிவாதம் இன்று நீதிமன்றத்தில் கட்டவிழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மதத் தலைவரான வேலன் சுவாமியைப் பொலிஸார் கையாண்ட விதம், அவருக்கு எதிராகப் பொலிஸாரால் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் போன்றவை இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபை பிரதேசம் ஒன்றில் சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கட்டப்படும் கட்டமைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டி, அது பற்றி அறிவிக்கும் அதிகாரம் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பிரதேச சபைத் தலைவரோ, செயலாளரோ பிரயோகிப்பர்.

அப்படி இருக்கையில் சட்டவிரோதக் கட்டுமானமானத் தையிட்டி விகாரையின் பக்கத்தில் அத்தகைய சட்டவிரோத கட்டுமானம் பற்றிய அறிவித்தலை பிரதேச சபை நடுமானால் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தில் பொலிஸார் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளருக்குக் கொடுத்துள்ள ‘மிரட்டல்’ அறிவித்தல் இன்று நீதிமன்ற விசாரணையின் போது சில சமயங்களில் மன்றின் கவனத்துக்கு எடுக்கப்படும் வாய்ப்பு உண்டு.

அது பற்றி தெளிவான அறிவுறுத்தல் ஒன்றை – சட்ட வியாக்கியானம் அல்லது விளக்கத்தை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இன்று பொலிஸாருக்கு நீதிமன்ற முகதாவில் வழங்குவார் என்றும் எதிர்பார்க்க முடியும். – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0