யாழில் நிமோனியாவால் கனடா வாசி உயிரிழப்பு.!
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டைப் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
அவர் கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.