உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

2015ஆம் ஆண்டு மண்சரிவில் சிக்கிய மக்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தங்குவதற்கு இடமின்றி துன்பத்தில் வாழ்ந்த லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 24 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமையில் இன்று (04) நடைபெற்றது.2015ஆம் ஆண்டு மண்சரிவு அபாயம் காரணமாக லிந்துலை ஹோல்றீம் பாதிக்கப்பட்டு தோட்டத்தில் பாதுகாப்பான தற்காலிகமாக தங்கியிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கான 24 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் விசேட பரிந்துரைகளுடன் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்துறை மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் ஏற்பாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது.இவ் ஒவ்வொரு வீடும், ஒரு வாழ்க்கை அறை, 2 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது மேலும் இந்த வீடு 10 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம்,வீதி வசதி மற்றும் சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.வீடுகளின் பயனாளிகள்,லிந்துலை நகர சபையின் தலைவர் மலிந்துவ லியனகே ,தோட்ட அதிகாரிகள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0