மகிந்த ராஜபக்சவை சந்தித்த அனர்கலி!
நடிகை மற்றும் முன்னாள் அரசியல்வாதியான அனர்கலி ஆகர்சா (Anarkali Akarsha) வெளிநாட்டிலிருந்து வந்த உடனேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பு இல்லத்தில் குடும்பம் சகிதம் சந்தித்துள்ளார்.அனர்கலி 2009 ஒக்டோபர் 29 இல் காலி மாவட்டத்தில் நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு,தென் மாகாண சபைக்கு தெரிவானவர்.
இவர் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கி பணியாற்றியவர்.அவரின் ஆசிர்வாதத்தில் தென் மாகாண சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அனர்கலி ஆகர்சா (Anarkali Akarsha) நடிகை, மொடல் அழகி, பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர்.2004ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அழகி போட்டியில் மகுடம் சூடினார். அதே ஆண்டில் உலக அழகி அணிவகுப்பில் இலங்கை அழகியாக போட்டியிட்டார்.