உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொட்டும் மழையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் ஆர்ப்பாட்டம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
17 பார்வைகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே ‘அரசே நிர்வாக சீரழிவிலிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை மீட்டுத்தா’ வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிர்வாக சீர் கேட்டினால் நோயாளர்கள் நோய்க்கான சிகிச்சையை பெறமுடியாத தையடுத்து வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.இதையடுத்து வைத்தியசாலைக்கு முன்னாள் நேற்று(3) மாலையில் கொட்டும் மழையில் மக்கள் ஒன்று திரண்டனர்.

இதன்போது வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அடிதடி கலாச்சாரத்தை உடன் நிறுத்து வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்று, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை அதிகாரத்தில்; இருந்து உடனடியாக நீக்கு, வைத்திய அதிகாரியின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு வைத்திய பணிப்பாளர் வெளியேற வேண்டும், ஜனாதிபதி உடனடி வைத்தியரை விசாரணை செய்ய வேண்டும், என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பொலிஸ் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் கொட்டும் மழையில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதேவேளை ஜனாதிபதிக்கு இந்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0