அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு.!
இறக்குவானை, கொலின்ஸ் வீதி பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று சனிக்கிழமை (03) மாலை, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து, இறக்குவானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, அந்த நபரை கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதித்தபோது, அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மெலிந்த உடல் அமைப்பு கொண்ட சுமார் 05 அடி 07 அங்குல உயரமுடையவர் எனவும், அவரது தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டுள்ளதாவும், வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை எனவும், அவர் கறுப்பு சட்டை மற்றும் மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.