உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்படுகிறதா? கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஊழியர்களை (ஆசிரியர்களை) பயன்படுத்துதல் தொடர்பான புதிய வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பாடசாலை நிறைவடையும் நேரத்தை பி.ப. 2.00 மணி வரை நீடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது நிலவும் இயற்கை அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பி.ப. 1.30 வரை தற்போதுள்ளவாறே தொடரும். தரம் 1 மற்றும் தரம் 6 தவிர மற்றைய அனைத்துத் தரங்கள்:2026 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணை ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் 6: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.தரம் 1: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும். புதிய சீர்திருத்தங்களின் கீழ் பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்தாமல், அந்த நேரத்தைக் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0