உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் – சஜித் விசனம்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
27 பார்வைகள்

டிட்வா சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 11.57 வீதத்தினால் அதிகரிக்கத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான தேசத்தையும் சிறந்த வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று மக்களை ஏழ்மைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் தள்ளிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்தபோது மேடைகள்தோறும் மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர்.9,000 ரூபா மின்சாரப் பட்டியலை 6,000 ரூபாவாகவும், 3,000 ரூபா பட்டியலை 2,000 ரூபாவாகவும் குறைப்போம் என உறுதியளித்துவிட்டு, இன்று மக்கள் வழங்கிய ஆணையைத் மறந்து மின்சாரக்கட்டணத்தை 11.57 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0