மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் – சஜித் விசனம்!
டிட்வா சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 11.57 வீதத்தினால் அதிகரிக்கத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுபீட்சமான தேசத்தையும் சிறந்த வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று மக்களை ஏழ்மைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் தள்ளிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்தபோது மேடைகள்தோறும் மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர்.9,000 ரூபா மின்சாரப் பட்டியலை 6,000 ரூபாவாகவும், 3,000 ரூபா பட்டியலை 2,000 ரூபாவாகவும் குறைப்போம் என உறுதியளித்துவிட்டு, இன்று மக்கள் வழங்கிய ஆணையைத் மறந்து மின்சாரக்கட்டணத்தை 11.57 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிடுகின்றனர்.