உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முள்ளியவளை குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
28 பார்வைகள்

வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கு குஞ்சுக்குளத்தின் வாய்க்காலின் பாதிப்பு நிலமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 01.01.2026நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

குறிப்பாக ஏற்கனவே குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் சீரமைப்புப்பணிகள் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த சீரமைப்புப் பணிகளும் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிப்படைந்து காணப்படுகின்றன.

இதனால் குறித்த வாய்க்காலின் அருகிலுள்ள குடியிருப்புக்காணிகளும் மண்ணரிப்பு பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், உரியவகையில் முன்னெடுக்கப்படாமை மற்றும் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினாலுமே இவ்வாறு பாதிப்புநிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பாதிப்புநிலைமையைச் சீர்செய்வதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0