உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பில் வெள்ளம் மற்றும் டித்வா புயல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடுகளும் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா மேற்கு பகுதியில் உள்ள காளிகோயில் வீதிக்கான புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு இன்று(2.1.2026) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையிலும் எங்களது அபிவிருத்தி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் பாரிய சூறாவளி தாக்கத்தின் ஊடாக நாட்டில் பல வீதிகள் பாலங்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளாகப்பட்டிருந்தது. அந்த வேலைகளையும் நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.வெள்ள அனர்த்தம் சூறாவளி தாக்கம் காரணமாக எங்களது அபிவிருத்தி செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

நாங்கள் மீண்டும் வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கின்ற செயல்பாடுகளை முன்முரமாக செயல்படுத்துவதற்கு ஆரம்பித்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0