மத்துகம பிரதேச சபையின் தலைவர் கைது.!
மத்துகம பிரதேச சபையின் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பிரதேச சபையின் செயலாளர் தங்கியிருந்த அலுவலக அறை பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரதேச சபை செயலாளரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.