வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்.!
யாழ். வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழுத் தலைவருமான ரஜீபன் தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பருத்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



