உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ரணில் விற்பனை செய்யவிருந்த நிறுவனம்:அமைச்சர் லால்காந்த வெளியிட்ட தகவல்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நாங்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விற்பனைக்கு விட்டிருந்த மில்கோ நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.அக்டோபர் 2025 நிலவரப்படி, நாங்கள் ரூ. 1490 மில்லியன் இலாபத்தை ஈட்டினோம். இது மில்கோவின் வரலாற்றில் மிக உயர்ந்த இலாபமாகும் என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மில்கோ வரலாற்று சிறப்புமிக்க இலாபத்தைப் பதிவு செய்துள்ளதால் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட போனஸ் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டில் 15,000 பால் பண்ணை விவசாயிகளுக்கு இலவச பால் பண்ணையாளர் ஆயுள் காப்பீட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மில்கோவின் வரலாற்றில் அதிக விற்பனை வருவாயைக் கொண்ட ஆண்டாக 2025 மாறியுள்ளது என்றும், அதற்காகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0