டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!
முதல் நாள் கடமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவு 15 இல் இடம்பெற்றது.
இந் நடவடிக்கை இன்று(01) சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்குபற்றதலோடு நடைபெற்றது.
இவ் நடவடிக்கையில் நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவ்விடங்கள் உரிமையாளரை கொண்டு உடன் துப்பரவு செய்யப்பட்டது.
அத்துடன் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.


